இந்தியாவில் பிறந்த இங்கிலாந்துக்காரர் ருட்யார்ட் கிப்ளிங். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவர் கால் பதிக்காத துறையே இல்லை. மிகச் சிறந்த எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் குழந்தைகளுக்காக எழுதிய அற்புதமான சிறுகதைகள் இவை.
யானைக்கு தும்பிக்கை வந்தது எப்படி?, ஒட்டகத்துக்கு திமில் வந்தது எப்படி?, கங்காரு தாவுவது ஏன்?, திமிங்கிலத்தின் தொண்டை சிறியதானது எப்படி?, காண்டாமிருகத்தின் தோல் சுருங்கியது எப்படி?, அர்மடில்லோ உருவானது எப்படி? என்ற ஆறு சிறுகதைகளும் படிக்கப் படிக்க திகட்டாத தேன்.
மத்திய அரசு ஊழியரான இவர் மொழிப்பெயர்ப்பு ஆர்வலரும் கூட சுமார் இதுவரை 45 புத்தகங்கள் எழுதவும், மொழிப்பெயர்ப்பும் செய்துள்ளார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதவும், மொழிப்பெயர்க்கவும் செய்துள்ளார்.
நோபல் பரிசுப்பெற்ற அமெரிக்க நாவலான ஜான் ஸ்டீன்பெக்கின் 'Grapes of Wrath' ஐ தமிழில் 'கோபத்தின் கனிகள்' என்ற பெயரில் மொழி பெயர்த்ததற்காக தஞ்சாவூர் இலக்கியப் பேரவையின் மொழிப்பெயர்ப்பு விருது பெற்றுள்ளார். மேலும் இவருக்கு தொழிற்சங்கவாதி. அகில இந்திய கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கத்தின் தலைவர் என பல்வேறு அடையாளங்களும் உண்டு.
Be the first to rate this book.