கப்லான் மோட்டார் வண்டியின் பின்புறத்திலிருந்து, தன் சட்டைப்பையில் கையைவிட்டுக்கொண்டு முன்னால் வந்து லெனின் முதுகைநோக்கித் தன் ரிவால்வரால் சுடுகிறாள். வேட்டுச் சத்தம் திடீரென்று கேட்டவுடன் ஒரே அமைதி நிலவியது: அதற்குள் மற்றொரு வேட்டுச்சத்தம். லெனின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் தொழிலாளி கூச்சலிட்டாள் கோப்டேவ் கட்டிடத்தின் மூலையிலிருந்து தலைதெறிக்க ஓடிவந்தான். மற்றொரு வேட்டுச்சத்தம் கேட்டது. லெனின் குண்டுபட்டு விழுந்தார்... போல்ஷ்விக் கீதம் நின்ற கட்டிடத்திற்குள்ளிருந்த மக்கள் விரைந்து வெளியே ஓடிவந்தார்கள்... நோவிக்கோவ் கூட்டத்திலிருந்து தள்ளிக்கொண்டு வந்து தன் ரிவால்வரைப் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தான்.வாஸிலி காயமடைந்த லெனினை மறைத்து நின்றுகொண்டு தம் ரிவால்வரால் நோவிக்கோவைச் சுட்டார்.
...வாஸிலி லெனின் தலையை மெல்ல நிமிர்த்தினார். எங்கும் ஒரே அமைதி நிலவியது. லெனின் தம் கண்களை மெல்லத்திறந்து...லெனின்: (மெல்லிய குரலில்) வேண்டாம், வேண்டாம்! பீதி அடையாதீர்கள்;தோழர்களே! கடமையைச் செய்யுங்கள்.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.