சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி பல பரிமாணங்களைக் கொண்டது. சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சமமான சமூக, அரசியல், பொருளாதார உரிமை கிட்டுவதே சமூக நீதியாகும். கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், உறவினர்கள், அண்டை வீட்டினர், நலிவுற்ற பிரிவினர் ஆகிய அனைவருக்கும் உரிமைகள் கிட்ட வேண்டும். ஏழைக்கும் உரிமை உண்டு, பணக்காரனுக்கும் உரிமை உண்டு. தொழிலாளி - முதலாளி இருவருக்கும் உரிமை உண்டு. ஆள்வோர் - ஆளப்படுவோர் இருவருக்கும் உரிமைகள் உண்டு. உரிமைகள் ஒரு வழிப் பாதையாய் இருக்கக்கூடாது. ஒருவரின் உரிமை மற்றவருக்குக் கடமையாகி-விடுகிறது. உரிமையும் கடமையும் இணைந்தே வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சமூகத்தில் அமைதி நிலவும்.
இந்த நூலில் தொழிலாளி - முதலாளி உரிமைகள் கடமைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமை குறித்து 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பேசப்பட்டு வருகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொழிலாளி - முதலாளி உரிமைகள், கடமைகள், உறவுகள் பற்றிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால் போராட்டங்களுக்கோ ஆர்ப்பாட்டங்களுக்கோ அவசியம் எழாது. இந்தச் செய்தியை மிகவும் ஆழமாகப் பதிவு செய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.