தோழர்தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள்’ என்னும் இத்தொகுதியில் 23 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 18 ஓரங்க நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. விந்தன், ஜெயகாந்தன் சிறுகதை மரபில் தமிழ்ஒளி செயல்பட்டிருக்கிறார். அரசியல் பகடியாக ஓரங்க நாடகங்களை தமிழ்ஒளி உருவாக்கியுள்ளார்.
Be the first to rate this book.