தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: சிறார் பாடல்கள் கதைகள்’ என்னும் இத்தொகுதியில் 122 சிறார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 121 குறுங்கதைகளும் இரண்டு அல்புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. தி.ஜ. ரங்கநாதன், விந்தன், தமிழ்ஒளி எனும் சிறார் ஆக்க மரபு வளமைமிக்கது.
Be the first to rate this book.