தோழர்தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி முப்பெரும் கவுகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
பாரதிதாசன் கவிதை மரபின் உச்ச வளர்ச்சியாகத் தமிழ்ஒளி கவிதைகள் உள்ளன. உணர்வுத் தளத்தைச் சரியான சொற்கள் மூலம் கவிதையாக்கியவர்.
‘தோழர் தமிழ்ஒளி: கவிதைகள்’ என்னும் இத்தொகுதியில் 128 கவிதைகள், ஒரு சிறு காப்பியம் இடம்பெற்றுள்ளது. 1944-1965 இடைப்பட்ட காலங்களில் இக்கவிதைகளைத் தமிழ்ஒளி எழுதினார். கால ஒழுங்கிலும் பொருண்மை சார்ந்தும் இக்கவிதைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.