தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: காவியங்கள்’ என்னும் இத்தொகுதி இரண்டாம் பாகமாக அமைகிறது. இதில் மூன்று காவியங்கள் இடம்பெற்றுள்ளன. 1957 இல் எழுதிய மாதவி காவியம் 1995 இல் அச்சு வடிவம் பெற்றது. இந்த காவியம் இருபதாம் நூற்றாண்டில் உருவான தலைசிறந்த காவியம் என்று சொல்லலாம்.
Be the first to rate this book.