தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி. பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி, தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: ஆய்வுகள் – கட்டுரைகள் – தன் வரலாறு’ எனும் இத்தொகுதி 13 ஆக்கங்களை உள்ளடக்கியது. தமிழ்ஒளி குறித்து தமிழ்ச் சமூகம் அறியாத பல செய்திகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த தமிழ்ஒளி செய்துள்ள ஆய்வுகள் காத்திரமானவை. பாரதி, புதுமைப்பித்தன். ரகுநாதன் ஆகியோர் குறித்தப் பதிவுகள் உள்ளன. அவரே பதிவுசெய்த அவரது வாழ்க்கைக் குறிப்புகள், அவரது அரசியல் கருத்துநிலை குறித்து அறிய உதவும் கடிதம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன
Be the first to rate this book.