நால்வர் என்று குறிப்பிடப்படுபவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர். ‘நாவல் வடிவில் நால்வர் புராணம்’ வரிசையில், சுந்தர நாயனாரின் உணர்ச்சிமிகு காவியம் உங்கள் கைகளில்!
• சுந்தரமூர்த்தி நாயனார் போகம், யோகம் என்ற இரு நிலைகளிலும் வாழ்க்கையை நடத்தியவர்.
• இறைவனால் ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்பட்டவர்.
• இறைவனின் கட்டளைக்கு ஏற்பத் திருமணக் கோலத்துடன் எப்போதும் காட்சி அளிப்பவர்.
• அந்தணர் குலத்தில் பிறந்து திருமுனைப்பாடி மன்னவன் நரசிங்க முனையரையரால் அரசிளங் குமரனாக வளர்க்கப்பட்டவர்.
• தன்னலமற்ற சிவத் தொண்டின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.
சுந்தரரின் ஒப்பில்லா இத்தகைய வாழ்க்கையைப் பக்தி மணமும் தமிழ்ச் சுவையும் சொட்ட சொட்ட விரிவாகப் படம்பிடிக்கும் புத்தகம் இது.
Be the first to rate this book.