தூத்துக்குடி சங்ககாலத்தில் இருந்தே முத்துக்குளித்துறை. தூத்துக்கும் மட்டுமன்று. வடக்கே வேம்பாறு தொடங்கித் தென்னெல்லையாய்க் குமரி வரை வழிநெடுக பாண்டிய நாட்டு முத்துக்குளித்துறைகளே. கொற்கைத்துறைமுகம் வழியாக வளமாக வணிகமும் கொழித்த நிலம். பின்னாளில் பொருநையாற்றின் நீர்ப்போக்கு மாறி கொற்கை மணற்பகுதியானதும், புன்னைக்காயல் துறைமுகப்பட்டனமானது. காலப்போக்கில் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களால், பட்டியாக இருந்த தூத்துக்கும வளர்ந்து பேரூரானது வரலாறு. அந்த வரலாற்றின் செம்பாகமான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பே இந்தப் புத்தகம்.
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன். வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க் கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ், சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண். இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு', சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', புதினமாக 'காமரூபவல்லி' பதிப்பித்த பிறகு கொண்டு வந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு 'சுவீட் காரம் காப்பி'.
Be the first to rate this book.