அரை நூற்றாண்டு காலப் போராட்டம். ஆதிக்க சக்திகள் அடிக்க அடிக்க எளிய மக்கள் திருப்பி அடித்த போராட்டம். அவமான படுத்தப்படுத்த திமிறி எழுந்த போராட்டம். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பதால் முன்னணியில் அவர்களே இருந்தனர். அவர்களுக்குதுணையாய் ஆண்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து நடத்திய போராட்டம். எப்போதெல்லாம் மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து மனிதன் தன்னை மனிதனாக மட்டுமே கருதிக்கொண்டு போராடுகிறானோ அப்போதெல்லாம் வெற்றிக்கனியைச் சுவைக்கிறான் என்பதைத் தற்கால மனிதர்களுக்குச் சொல்லும் போராட்டமே இந்த தோள்சீலைப் போராட்டம்.
Be the first to rate this book.