அணைகள் கட்டுகிறோம்; ஆலயங்கள் எழுப்புகிறோம்; அவை புதிய பாணியில் நவீன மிடுக்குடன் காட்சியளித்து நம்மைக் கவர்ந்த போதிலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சைக் கோயிலும், கரிகால் சோழன் எழுப்பிய கல்லணையும் புறந்தள்ளக் கூடியவையா? இல்லையே! அப்படி எண்ணிக் கொண்டுதான் தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைய வேண்டுமென அழைக்கின்றேன். தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் இந்திய மொழிகளிலோ, ஏன், உலக மொழிகளிலோ அதுபோன்ற ஒரு நூல் தோன்றியதில்லை என்பது ஆன்றோர் கருத்து. நூல்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் தொல்காப்பியம் போல் தோன்றியதில்லை. எனவே நமக்கு காலத்தால் மூத்ததும் கடித்துத் தின்றால் மட்டுமே சுவை வழங்கும் கரும்பனையதும் எளிதாகவும் இனிப்புத் தரக் கூடிய கணிக்குவியல் கொண்டதும் தொல்காப்பியம் எனலாம்.
Be the first to rate this book.