“நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பல்துறை பற்றி அறிவதற்குத் துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப் புலவர்கள் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இது இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல் போன்றதன்று! அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழி ஆராய்ச்சியும், மேலை நாட்டவரால் விரும்பிப் போற்றப்பட்டு வரும் இலக்கிய ஆராய்ச்சியும், பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இயங்குகிறது. ஆகவே தொல்காப்பியர் வழி நின்று எழுத்தும் சொல்லும் பொருளும் (இலக்கியமும்) ஆராய்ந்து தமிழகத்தின் ஏற்றம் காண்போம்."
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.