கோவில் என்பது அதிகாரம். வர்த்தகத்தின் மய்யம் தான். பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு கோவில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் ஆதிக்க சக்திகள் எவ்வாறு அதைக் கைப்பற்றுகிறார்கள். அதற்கு குடும்பத்தின் உட்பகையையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் வருவாய் பெருகுவதைக் கண்டு பிராமணியம் எவ்வாறு கோவில்களை தனதாக்கிக் கொள்கிறது என்பதை அருமையாக விவரித்துள்ளார் முருகேசன்.
-மதுக்கூர் இராமலிங்கம்
'தோலீஸ்வார்' வாசித்தது இன்ப அதிர்ச்சி, முருகேசன் ரத்தமும் சதையுமான ஒரு வாழ்வை எழுத்தோவியமாக்கி உள்ளார். 'தோலீஸ்வரர்' நடப்பு சமூகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆதிக்கத்தை தோலுரித்துக் காட்டுகிறது. இது தமிழ்ச் சமூக வரலாற்றில் நடந்த, நடக்கும் கதை குலசாமிகளாக, நாட்டார் சாமிகளாக இருந்தவர்களை மேல்நிலையாக்கம் செய்து 'பெரிய' தெய்வங்களாக மாற்றி அடித்தள மக்கள் பண்பாட்டை காவு கொள்வதை மிக இயல்பாகச் சித்தரிக்கிறார். அறிவொளி முருகேசனுக்கு படைப்பு முறை கைகூடி வருகிறது.
- பேரா. இரா. காமராசு
Be the first to rate this book.