சங்க இலக்கியத் தொகைநூல்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று போற்றப்படும் பெருமைக்குரிய நூல் கலித்தொகை. பாடல் சிறப்பாலும், நாடகப் பாங்காலும், தமிழரின் வாழ்வியல் முறைகளைக் காட்டும் வளப்பத்தாலும் கற்றோரே அன்றி மற்றோரும் போற்றும் பாங்குடையது. உரையாகவும், கதைசொல்லும் போக்கில் அமைந்த உரைநடையாகவும், நாடக வடிவாகவும் அறிந்து போற்றப்படுகின்ற கலித்தொகைப் பாடல்களைத் தொகுப்பியல் நோக்கில் அணுகி ஆராய்ந்து, தொகை என்பதன் பொருளை ஆராயத் தொடங்கி, தொகுத்தவர் பற்றிய பெயரில் நீண்டு, பாடுபொருளாலும், பாடப்பட்ட பாவகையாலும், திணை வைப்புமுறையாலும், பாடியோர் பற்றிய கருத்தாக்கத்தாலும் எழுகின்ற எண்ணங்களை எல்லாம் குவித்துக் காட்டும் கண்ணாடியாக அமைந்த ஓர் ஆய்வு நூல் இது
Be the first to rate this book.