ஒரு நாடு நிம்மதியாக இருக்கவேண்டுமானால் அதன் ராணுவம் பலமாக இருக்கவேண்டும். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகமே ஒரு நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் உலகின் எந்த ஒரு ராணுவத்துக்கும் சற்றும் குறைவானதல்ல. நம் மூவர்ணக் கொடியையும் பாரதத்தையும் காக்கப் போராடி, போர்க்களத்தில் தங்கள் வீரதீரத்தைக் காட்டிய வீரர்களுக்குத் தரப்படும் உயரிய விருது பரம்வீர் சக்ரா.
பரம்வீர் சக்ரா பெற்ற வீரர்களின் தீரச் செயலையும் ஈடு இணையற்ற தியாகத்தையும் மயிர்க்கூச்செறிய விவரிக்கிறது இந்தப் புத்தகம். அதனூடே இந்தியாவின் போர்க்கள வரலாற்றையும் அந்தச் சூழலின் அரசியல் நிலையையும் அறிந்துகொள்ள முடிவது கூடுதல் சிறப்பு.
Be the first to rate this book.