தியானம், வல்லமையை உங்களுடைய மனத்திற்கு உணர்த்துவதுடன். விண்ணுலகின் வாலறிவுடன் உங்களுடைய ஆன்மாவை இணைக்கிறது - இவை அனைத்தும் இறையாற்றலின் பால் உள்ள நம்பிக்கையின் வலிமையாலேயே நடக்கின்றன. ரியூவோ ஓகாவா இயற்றிய "தியானத்தின் தெய்வீகம்" என்கிற நூல். இறையாற்றலின் பால் கொள்ளும் நம்பிக்கையின் வலிமையையும், தியானப் பயிற்சியையும் ஒன்றிணைத்து, உள்ளார்ந்த அமைதியை உருவாக்கிக் கொள்வதற்கும், உள்ளார்ந்த தெய்வீகத் தன்மையைக் கண்டடைவதற்கும், முழுநிறைநலம் படைத்த தன்னகத்தை அடைவதற்கும். பிறர்க்கென வாழ்கின்ற தகைமையும் பெருங்கருணையும் கொண்ட பொருளார்ந்த வாழ்க்கையைப் பண்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது.
இந்நூலின் வாயிலாக,
*அன்றாட வாழ்க்கை முழுவதும் ஆழமான அக விழிப்புணர்வுடன் வாழ்வதற்கும்:
*உங்களுடைய பிரச்சினைகள், புறநிலை யதார்த்தங்கள். சுற்றுச் சூழல்கள் ஆகியவற்றின் நோக்கத்தையும், அவற்றுள் பொதிந்துள்ள பொருளையும் புரிந்து கொள்வதற்கும்:
*தியானத்தின் முழுப் பலன்களையும் அடையும் பொருட்டு அதன் வெவ்வேறு படிநிலைகளில் பயிற்சி மேற்கொண்டு முன்னேறுவதற்கும்:
* உங்களுடைய தேவைகளுக்குப் பெரிதும் பொருந்தக் கூடிய தியான வகைகளைக் கண்டறிவதற்கும்:
*தியானத்தைப் பற்றிப் பொதுவாக எழுப்பப்படக் கூடிய வினாக்களுக்கு விடை காண்பதற்கும் கற்றுக் கொள்வீர்கள்.
ரியோ ஒகாவா ஒரு ஆன்மிகத் தலைவர். தற்கால தொலைநோக்கு சிந்தனையாளர். 'மகிழ்ச்சி அறிவியல் (Happy science) அமைப்பின் நிறுவனர். உண்மை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
ஜப்பானில் 1956 இல் பிறந்த ருயுஹோ, டோக்கியோவில் சட்டக் கல்வியும், பின்பு நியூயார்க்கில் சர்வதேச பொருளியலும் படித்தார். 1986 இல் ஒரு மிகப்பெரிய ஜப்பானிய வர்த்தக நிறுவனத்தில் தனது தொழில் பயிற்சியைத் துவக்கினார்; தொடர்ந்து 'மகிழ்ச்சி அறிவியல்' அமைப்பையும் நிறுவினார்.
1987 இல் ஐஆர்ஹெச் பிரஸ் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 2,850க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது சில பிரபல நூல்கள்: தி லாஸ் ஆஃப் தி சன், தி கோல்டன் லாஸ் மற்றும் தி லாஸ் ஆஃப் எட்டர்னிட்டி.
Be the first to rate this book.