திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோவிலின் சிறப்பிற்கு மூன்று காரணங்களைக் கூறமுடியும்.
1. இந்தக் கோவில், எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆறு ஏக்கர் பரப்புடைய பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறுது. இது பறவைகளின் சரணாலயமும்கூட.
2. கோவிலின் கோபுரச் சுவரோவியங்கள் விஜயநகர கால குதிரை வணிகத்தை விளக்குவது.
3. கொஞ்சமும் ஆரவாரம் இல்லாத, ஆடம்பரம் இல்லாத சிறிய கிராமத்தில் கோயில் அமைந்திருப்பது.
இத்தகைய சிறப்புடைய கோவிலைப் பற்றிய சிறிய அறிமுகம் இந்தநூல். கோவிலுடன் தொடர்புடைய தல புராணங்களையும் சிறு இலக்கியங்களையும் இந்த நூல். விளக்குகிறது. தமிழக கோயில்கள் பற்றி ஆராய்ந்து ஆறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அ.கா.பெருமாள் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
Be the first to rate this book.