மதுரையில் ஆரம்பக்கலவியைப் படிக்கத் தொடங்கியது முதல், பட்டப்படிப்பை பாளையங்கோட்டையில் படிக்கச் சென்றது வரை, இளமைப் பருவம் முழுவதும் பரங்குன்றம் மலையைக் கடந்தே சென்றுள்ளேன். அதைப் பார்க்கும் போநெல்லாம் மலைக்க வைக்கும், மலைக்க வைக்கும் பலவற்றைத் தன்னுள் கொண்டுள்ளதால் மலை என்றார்களோ?
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கியது. உலகம் நோன்றிய நாள் முதல் எல்லாவற்றையும் பார்த்த அம்மலையை வைத்து சிறுமைத்தனமான காரியங்கள் நடக்கிறது. மலையும். அம்மலையினடியில் வாழும் மக்களின் வரலாறு நான் என்ன? கோடிக்கணக்கான ஆண்டுகள் முதல் இந்நாள் வரை அங்கு என்ன நடந்தது என்பதன், நிலவியல், வரலாறு, அரசியல் பார்வையே இந்நூல்.
1.பரங்குன்றம் மலையின் தோற்றம்
2.மதுரையில் மனிதர்கள் வாழ்ந்த வரலாறு
3.மதுரையின் அரசியல் வரலாறு
4.பரங்குன்றத்து வழிபாட்டு வரலாறு
5.முருக வழிபாட்டைப் புறக்கணித்த பிறமலைக்கள்ளர்களின் எதிர்சமய வரலாறு
6.தர்ஹாக்கள் உருவான வரலாறும் முருக ராவுத்தரும், சிவ ராவுத்தரும்
7.சிக்கந்தர் தர்ஹா தோற்ற வரலாறு
8.கார்த்திகை தீப வரலாறு
9.உலக, இந்திய,தமிழ்நாடு நிலவரை வரலாறு
10.இந்து சமய அறநிலையத்துறை வரலாறு
11.மீனாட்சி கிளி மூலம் சிவன் சொல்லும் மதநல்லிணக்கம்
12.சனாதன வரலாறு
13.மதங்களும்-அரசியலும்-மதச்சார்பின்மையும்
Be the first to rate this book.