பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, 'அரிதின் ஆய்ந்து', எழுதியுள்ள இந்த நூல், திருக்குறள் வரலாற்றில் உவமைகள் குறித்து விரிவாக எழுதப்பெற்ற முதல் நூல் மட்டுமல்ல, இதுவரை இத்தகையதொரு நூல் எழவில்லை. உவமைகளின் வழியே வள்ளுவத்தின் ஆழ் பொருளை உணர இயலும்; எனவேதான்,வள்ளுவப் பெருந்தகை இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உத்தியைத் தன் நூலில் பயன்படுத்தி அறம் உரைக்கிறார்.
தொல்காப்பியம் முதற்கொண்டு அணியின் தோற்றமும், காலந்தோறும் அது பெற்ற வளர்ச்சியும் குறித்து நூல் நிரந்தினிது பேசுகின்றது. இந்த நூலில் அணியின் தோற்றமும் வளர்ச்சியும்,உவமையணி,திருக்குறளில் உவமை, உவமையும் பொருளும், பொருளணி, சொல்லணி, சுவையணி என்ற ஏழு வண்ணமிகு தலைப்புகள் உள்ளன.
இவற்றின் ஊடாக அணிகளின் எழில்மிகு உலகுக்குள்ளே பேராசிரியர் இசு நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கின்றார். தொடக்க நிலை வாசகன் முதல் ஆய்வு மாணவர்கள் வரை, எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், எளிய நடையில் அறவோர் மு.வ.வின் வழிகாட்டுதலில் உருவான சிறப்புமிக்கது இந்நூல்.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கிறது.
- சி.இராஜேந்திரன் IRS
பாமரருக்கும் பரிமேலழகர் நூலாசிரியர்
Be the first to rate this book.