இயற்கையாக நிகழும் இடப்பெயர்வுகளுக்கும். ஒரு நிலத்திலிருந்து வலிந்து வெளியேற்றப்படும் மனிதர்கள் மேற்கொள்ளும் இடப் பெயர்வுகளுக்கும் இருக்கும் வேறுபாட்டை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
நிர்ப்பந்தம், ஆசைகள், கனவுகள் என்று எல்லாவற்றையும் மனத்தில் ஏந்தியபடி, தாய்நாட்டின் நினைவுகளைச் சுமந்துகொண்டு, திரை கடலோடியாவது புகலிடம் தேடும் நம்பிக்கையோடு, தங்கள் வேர்களைக் கைவிட்டுக் குற்ற உணர்ச்சியோடு பயணப்படும் மனிதர்களின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை இந்த நாவலில் பதிவு செய்திருக்கிறார் வேலையா கார்த்திகேயன்.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவுப் பரிசுப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நாவல் இது.
Be the first to rate this book.