இன்றைய நவீன உலகில் சுமார் 2,00,000 வகையான உயர்நிலைத் தாவரங்கள், 1,20,000 இரண்டாம் நிலைத் தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, சுமார் 10,000 பறவை இனங்களும், 6,000 பாலூட்டிகளும், 10,00,000-க்கும் மேற்பட்ட பூச்சிகளும் இப்புவியில் பரிணமித்துள்ளன. மனித சமூகத்தின் தோற்றத்திற்கு சுமார் 5 கோடியே 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தேனீக்கள் பூமியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. தேனீக்கள் ENDOPTERYGOTA என்ற தொகுதியிலும், Hymenoptera என்ற வரிசையையும் (Order) சேர்ந்ததாக அறியப்படுகிறது. இவ்வரிசையில் எறும்புகள், குளவிகளுடன் தேனீக்களும் காணப்படுகின்றன. இக்குடும்பம் உலகளவில் 90 வகைகளாகவும், இந்தியளவில் 57 வகைகளாகவும் காணப்படுகின்றன. உலகளவில் சுமார் 1,15,000 வகைகளாகவும் (Species), இந்தியாவில் சுமார் 8,000 வகைகளாகவும் காணப்படுகின்றன. தேனீக்கள் உலகளவில் சுமார் 20,000 வகைகளாகக் காணப்படுகின்றது. அதில் சுமார் 500 வகைகள் சமூகப் பூச்சிகளாகவும், கூட்டமாகவும் (Colonies) வாழும் பண்பையும் பெற்றுள்ளன. Apis mellifera என்ற பொதுவான தேனீ, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு அமெரிக்கா, ஆசியப் பகுதிகளில் காணப்படுகிறது.
தேனீக்கள் 'கடுமையான உழைப்பாளிகளாக' அறியப்படுகிறது. வாழ்விடம் சுருங்குதல் அல்லது அழிதல், பூக்கும் தாவரங்களின் அழிவு, வாழ்விடத்திற்கான பெரிய மரங்களின் அழிவு, காடழிதல் போன்ற பல்வேறு காரணிகளால் பல வகையான தேனீக்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. இக்காரணங்களால் பல வகையான தேனீக்கள் முற்றாக அழிந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
-ஏ.சண்முகானந்தம்
Be the first to rate this book.