பாம்புகளை முழுமையாக அறிந்துகொள்ளத் துணை செய்கிறது இந்நூல். தீயணைப்புத் துறையில் பணியாற்றும் இந்நூலாசிரியர் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடும் பாம்புகளைக் காயமின்றி கைப்பற்றி வனப்பகுதியில் விடுவதன் வாயிலாக பாம்புகளின் தன்மைகளை அறிந்துகொண்டவர். தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காணப்படும் பாம்புகளைப் பற்றி அவர் அறிந்தவற்றையும் வெவ்வேறு வகையான பாம்புகளைப் பற்றி அவர் கற்றவற்றையும் வெளிப்படுத்துகிறது இந்நூல்.
Be the first to rate this book.