இச்சிறு உடலில் உருவாகி மனமெங்கும் பெருக்கெடுக்கும் உணர்வுகளை மொழியின் துணைகொண்டு ஒரு கோப்புக்குள் அடக்க எத்தனிப்பவை கவிஞர் சகியின் கவிதைகள்.
மொழியின் நளினம் அகலில் துளிர்க்கும் ஒளியென இத்தொகுப்பெங்கும் பரவியிருக்கிறது. நெடிந்துயர்ந்த மரமொன்றில் படர்ந்து செல்லும் கொடி காற்றில் அலைவுற்று மீண்டும் மரம் தழுவுதல் போல எங்கே திசை மாறினாலும் மீண்டும் மீண்டும் மோகத்தைப் பற்றிக்கொள்கின்றன இக்கவிதைகள். காதலை உள்ளிழுத்துக் காமத்தை வெளியிடும் பாத மண்ணில் அடைக்கலமாகும் கவிஞரை சுனை நீராய் ஆசிர்வதிக்கிறது இத்தொகுப்பு.
- கவிஞர். தாயுமானவன் மதிக்குமார்
Be the first to rate this book.