நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான அல்லாட்டங்களைக் குறித்து எண்ணற்ற படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஹெர்மன் ஹெஸ்ஸேயின் இப்புதினமும் அந்த அகப்போராட்டத்தையே களமாகக் கொள்கிறது. வேறுபடுவது எங்ஙனம் எனில் தன்னறிதலை நோக்கிய பயணத்தில் பயமும் குழப்பங்களும் நீங்கி அவ்விடத்தைத் தீர்க்கமான அறிவு ஆக்கிரமிக்கிறது. அறிவும் தேடலும் மனிதனின் வலியைப் போக்குவதில்லை. மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்பதே இப்படைப்பு சுட்டும் உண்மை.
Be the first to rate this book.