இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதறுண்டு கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூறையாடப் போவது தெரியாமல் அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். அப்படிக் காலடி வைத்த வெள்ளை ஏகாதிபத்யம், இந்தியாவுக்குள் இருக்கிற வியாபாரச் சந்தையைக் கருத்தில் கொண்டு, நம் நாட்டில் இருக்கிற இயற்கைச் செல்வ வளங்களையெல்லாம் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, கிழக்கிந்தியக் கம்பெனியைத் தொடங்கியது. எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள் கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு மறைமுகமாக உதவினர்.
கோவைசூலூர் இவரது தாய்மண். எளிய குடும்பத்தில் பிறந்தஇவர் படித்தது பத்தாவதுமட்டுமே. பிறகு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் படிப்பு.ஐம்பதுக்கும்மேற்பட்ட மேடை நாடகங்கள், கோவை, சென்னை வானொலியில் பங்கேற்பு. அறுபத்து மூன்று நாயன்மார்கள். தீரன் சின்னமலை 13 வாரத் தொடர் நாடகங்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடகங்கள். இலக்கியம் மற்றும் இதழியல் பணியில் பல வருட அனுபவம்மிக்க இவர் வெண்பா இலக்கியத்தில்தேர்ந்தவர். அதனால் இவர் வெண்பாச் சித்தர்என்றும் அழைக்கப்படுகிறார்.சாட்டையில்லாதபம்பரம், கண்ணைத் தொறக்கனும் சாமி, சுதந்திர பாரதி, பசும்பொன்தெய்வம், துளசி மாலை எனப் படங்கள்தயாரிப்பு, இயக்கம் எனத் திரைப்படத்துறையிலும் சாதனை படைத்தவர். இவரின்கலை இலக்கியப் பணிக்காக அப்துல் கலாம் அவர்கள்நேரில் அழைத்து, பாராட்டி வாழ்த்தியுள்ளார் தமிழ்நாடுஅரசு தமிழ் வளர்ச்சித் துறையின் "முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது" அகவை முதிர்ந்த தமிழறிஞர்தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) மூலம் மத்திய அரசின் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
Be the first to rate this book.