இரு இதயங்களுக்கு இடையே உள்ள மௌனத்தை, பிரிவை, தேடலை. மகிழ்ச்சியை, அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்த, கவிதைகளால் மட்டுமே முடியும். பார்வையின் வழியே பிரபஞ்சத்தை ரசிக்க இயல்வதும், கண்களின் வழியே கடவுளைத் தரிசிக்க முயல்வதும் காதலில் மட்டுமே சாத்தியம். வானம் அருகில் இருப்பதாகத் தெரிவதும், பூமி தூரமாய்த் தெரிவதாகப் புரிவதும், நின்று கொண்டிருந்தாலும் நிலவில் நிற்பது போல் எடையிழந்ததாய் அறிவதும் காதலின் மாயாஜாலம். அப்படிப்பட்ட காதல் மொழியைக் கவிதையாக்கி எல்லாத் தருணங்களிலும் உணரப்பட்ட பரவசங்களை வரிகளாக்கி உருவாக்கப்பட்டிருப்பதே 'தீராக் காதல்' நூல்.
- ஜின்னா அஸ்மி
Be the first to rate this book.