கவிமனது அசாத்தியமான எதையும் தன் படைப்புக்குள் நிகழ்த்திக் காட்டும் வித்தை அறிந்தது. நினைத்த நேரத்தில் அண்டத்தின் கூறுகளை உரசிப் பார்த்துவிட்டு தன் கிராமத்து ஏரிக்குள்ளிருந்து முக்குளித்து எழும் மாய விளையாட்டுகளை நூலாசிரியர் நிகழ்த்திப் பார்த்திருக்கிறார். பால்வெளியிலிருந்து தனது பனைமரக் காட்டுக்கு ஒரு சாலையை அமைத்து இந்தத் தொகுப்பிற்குள் மடித்து வைத்திருக்கிறார். அவரது பாதையெங்கும் வெளிச்சம் தரும் விளக்கு மரங்கள் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கண் சிமிட்டுகின்றன. அந்த சின்ன வெளிச்சத்தின் கீழ் ஏதேனும் ஒரு புள்ளியில் நமது பயணமும் அவரது பயணமும் எதிர்பட நேரிடும்போது நூலாசிரியரோடு இன்முறுவலோடு கைகுலுக்கி உரையாடலாம்.
-கவிஞர். யாழிசை மணிவண்ணன்
Be the first to rate this book.