வேள்பாரி வாசகர் மன்றம் வாசகப் பரப்பினூடே தோழமையை மலரச்செய்து படர்கிறது.
செயலும் சிந்தனையும் ஆக்கமும் ஊக்கம் பெறும் களமாக வாசகர் மன்றம் வினையாற்றுகிறது. இம்மன்றம் மூலமாக இணைந்த வாசகர்கள் பறம்பு பாட்டாபிறை குழுவின்மூலம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளை நூல்களாக வெளியிட்டுப் புதிய துவக்கங்களை உருவாக்குகின்றனர்.
-எழுத்தாளர் சு. வெங்கடேசன் நாடாளுமன்ற உறுப்பினர்
இயற்கை மீது ஆர்வம் கொண்ட ஓர் இளம் படைப்பாளி குழந்தைகளுக்கான படைப்போடு வந்திருப்பது ஆகச்சிறந்த விசயம். சிறார் இலக்கியம் அரிதாகிப்போன இந்தக் காலத்தில் ஓர் இளைஞர் சிறார் படைப்பிலக்கியத்தில் கிளர்ந்தெழுவது மகிழ்வாக இருக்கிறது.
-பா. திருப்பதி வாசகன்
தேடி வந்த தேவாங்கு என்ற இந்தக் கதையில், தேவாங்கு ஒரு குழந்தையின் மனத்தில் பதிந்து. அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் குழந்தையிடம் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அதைப்பற்றிய கேள்விகளை உருவாக்குகிறது. அதற்குப் பதில்களையும் கண்டுபிடிக்கிற விதமாகக் கதை எழுதப்பட்டிருக்கிறது. தேவாங்கு டெடி பொம்மையின் வழியாக உயிருடன் வருகிற அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறார் ஆசிரியர்.
-எழுத்தாளர் உதயசங்கர்
Be the first to rate this book.