வங்கி அதிகாரியான ஆண்டி டூஃப்ரீன், தான் செய்யாத குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இருண்ட ஷாஷாங்க சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார். அங்குள்ள கொடூரமான சூழலும், நம்பிக்கையற்றவாழ்க்கையும் அவரைச் சூழ்ந்தாலும், ஆண்டி உடைந்து போவதில்லை. சிறையில் 'ரெட்' என்ற கைதியுடன் அவருக்கு ஆழமான நட்பு மலர்கிறது. தனது அமைதியான சுபாவத்தாலும், கூர்மையான அறிவாலும் சிறை அதிகாரிகளிடமும் சக கைதிகளிடமும் மாற்றத்தை உருவாக்குகிறார் ஆண்டி.
சுமார் 19 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, மனித மனதின் தளராத நம்பிக்கையும், விடுதலையை நோக்கிய தீராத தாகமும் ஒருவரை எத்தகைய எல்லைக்கும் அழைத்துச் செல்லும் என்பதை இந்தத் திரைக்கதை விவரிக்கிறது. உலகத் சினிமாவின் ஈடுஇணையற்ற காவியங்களுள் ஒன்றான இத்திரைப்படத்தின் முழுமையான திரைக் கதை வடிவம் இப்போது உங்கள் கைகளில்.
-நாதன் பதிப்பகம்
Be the first to rate this book.