என் பாட்டி துரைச்சியம்மாள் நான் சொல்கிற 'என்' கதைகளை, 'சுய' கதைகளை வியப்புடன் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். 'எழுதுடா' என்று கொம்பு ஒடித்துக் கொடுத்தார்கள். என் ஐந்தாவது வயதில் நான் எழுதிய முதல் கதை என்னைப் பற்றியதுதான். தப்புத் தப்பாக எழுதிய என் எழுத்தை என் அத்தை தமிழ்ப் பண்டிதையாக இருந்த கமலத்தம்மாள் திருத்திக் (தவறுகளை மட்டும்) கொடுத்தார்கள். அதனை என் தந்தையாரிடம் தந்து ஓரணா ஸ்டாம்பு ஒட்டி 'அணில்' போஸ்ட் செய்துவிட்டு நானும் என் நண்பன் தங்கராஜ் ஸ்டீபன் ஆகியோருடன் காத்திருந்து பின் - மறந்து போய்விட்டேன்.
-முன்னுரையிலிருந்து
Be the first to rate this book.