தமிழனே தனித்தமிழில் எழுதுவது முடியாத செயல் வேண்டாத ஒன்று என வீணே பேசித் திரியும் இக்காலத்தில், அவர்கட்குத் தக்க மறுமொழி கூறும் முறையிலும், தமிழன் தனித் தமிழிலேயே எழுத. பேச வேண்டும் என்னும் நிலையை உருவாக்கவும் புலவர் பெருந்தகை இளங்குமரனார், 'தனித்தமிழ் இயக்கம்' என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். இலக்கியச் செம்மல் இளங்குமரனார் நிறை புலமையாளர், சொல்லாராய்ச்சி வல்லுநர். இளங்குமானார் அவர்கள் தனித்தமிழ் வளத்தில் மறைமலையடிகளாராயும், சொல்லாராய்ச்சித் திறத்தில் பாவாணராயும் விளங்குவதால் அந்த இருபெரும் சான்றோர்களும் இணைந்த ஓரறிஞராக இன்று திகழ்ந்து வருகிறார். 'இருப்பதை இழப்பது எளிது; இழந்ததை மீட்பதும் அதனை வழக்குக்குக் கொண்டு வருதலும் அருமை. அத்த அரிய செயலைச் செய்ய நம்மைத் தனித் தமிழ் இயக்கத்தின்பால் ஆற்றுப்படுத்துகிறார் புலவர் பெருந்தகை அவர்கள். தமிழின் தூய்மையைக் காக்கவும். எதிர்ப்பைச் சாய்க்கவுமான போர்வாளாக இந்நூலை அவர் தமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்.
-முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன்
Be the first to rate this book.