தனிமையின் வெளி, தனிமைப்பட்ட பெண்களின் உலகத்தை நேரடியாக அணுகியிருக்கும் கதைகள். உருவகங்கள், புனைவுகள், உவமைகள், மீமிகை கற்பனைகள் எல்லாவற்றையும் தாண்டி வெவ்வேறு காரணங்களுக்காகத் தனிமையின் வெளியைத் தேர்ந்தெடுத்துத் தம் வானேகும், புதிய பேரண்டத்தைத் தமக்குத்தாமே கட்டமைத்துக்கொள்ளும், கதையாடலைத் தம் உடலின் மீது வரித்துக்கொள்ளும் பெண்களின் வாக்குமூலமனைய திணைகள். கனவுகள் என்று எவையுமில்லை. எல்லாமே இலட்சியங்கள். தனியே பெண்ணென்று யாருமில்லை. ஒட்டுமொத்த சமூகத்திற்கான, எல்லோருக்குமான மாண்பை முன்னெடுத்துவைக்கும் அடிகளின்
குரல்கள்.
Be the first to rate this book.