நாடு கெடுவதற்கு எதிரிகள் மாத்திரம் காரணமல்ல. உள்நாட்டானும், இனத்தானுந்தான் முதல் காரணம்.இவர்கள் இல்லையென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இனியாகிலும் உண்மையாக நடந்து நாட்டுக்கும் இனத்துக்கும் நற்பெயர் கொண்டு வாருங்கள். சூழ்ச்சி என்பது ஒரு தங்கவிலங்கு என்பதை நீங்கள் உணர வேண்டும். அறியாமை, மடமை, பழமை, ஆதிக்கம் இவையெல்லாம் தமிழர் சமூகத்துக்குப் போடப்பட்டிருக்கும் தங்க விலங்கு. அந்தச் சூழ்ச்சியில் அகப்படும்போது ஆனந்தமாக இருக்கும் விலங்கு தங்கமாயிருப்பதால்.
விலங்கு எந்த உலோகத்தால் செய்யப்பட்டால் என்ன? விலங்கு விலங்குதான் என்பதை நீங்கள் மனத்திற் கொள்ள வேண்டும்.ஆகவே ஒரு கொடிய சமூகத்தாரால் தமிழ்ச் சமூகக் கைகளுக்கு மாட்டப்பட்டிருக்கும் தங்க விலங்கை உடைத்தெறியப் பாடுபடுங்கள்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.