'தமிழ் இலக்கிய பரிமாணத்தில் வாழ்வியல் அறம்' அரியதோர் வழிகாட்டி நூல் விழுமியங்கள் போற்றப்படா இக்காலகட்டத்தில், விழுமியங்களை வலியுறுத்தும் இந்நூல் காலத்தின் தேவைகருதி எழுதப்பெற்ற உயரிய நூலாகும்.
நூலாசிரியர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், நீதிநூல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களைக் காட்டுவது அவரின் பரந்துபட்ட நூலறிவுக்குச் சான்றாக அமைவது. மேலும் ஆசிரியர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் முதலானோரின் திரை இசைப்பாடல்களையும் பொருத்தமான இடங்களில் எடுத்தாண்டுள்ளமை சிறப்பு.
நூலாசிரியர் முனைவர் மு.கற்பகம் அவர்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம். மேலும் பல நல்ல நூல்களைத் தமிழன்னையின் திருவடிகளில் காணிக்கையாக வழங்குவாராக! வாழ்க நூலாசிரியர்;தொடர்க அவரின் தமிழ்ப்பணி.
-அன்பன்
ப.சுப்பிரமணியன்
Be the first to rate this book.