நடைமுறை வாழ்க்கையின் அன்றாடங்களிலிருந்து கதைகளைப் பின்னும் சந்துரு, அவற்றை இயல்புவாதக் கதைகளிலிருந்து அடுத்தத் தளத்திற்குக் கொண்டுசெல்வது அவரது நவீனமாக இருக்கிறது. இன்றைய இலக்கியப்போக்கில் யதார்த்தவியல் என்பதன் முக்கியத்துவம் நம்மை நாமே பிரதிபலித்துக்கொள்ளும் கண்ணாடி. அந்தக் கண்ணாடியை மிகச்சரியாக நம் முகத்துக்கு நேரே தூக்கிப்பிடிக்கிறார் சந்துரு. தமிழ் படைப்புச் சூழலில் தற்காலத்தில் நடைபெறும் பல்வேறு சிறுகதை மற்றும் குறுநாவல் போட்டிகளில் பங்குகொண்டு, தொடர்ந்து பரிசுகளை வென்றிருக்கிறார். அவ்வகையில் ‘கணையாழி’ நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற கதையும் இத்தொகுப்பில் உள்ளது.
Be the first to rate this book.