'தமிழெழுத்து தமிழெழுத்தே என்னும் இந்நூல் நாவலர் கோட்டத்தை நிறுவிய யாழ்ப்பாணத்து மானிப்பாய், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குகின்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சமயப்பூசல், காலனிய எதிர்ப்பு என்ப என்பதான நிலைப்பாடுகளில் தெற்காசிய சமூகம் ஈடுபட்டிருந்த வேளையில் தமிழகத்திலும் ஈழத்திலும் எழுந்த தமிழ்த்தேசியச் சிந்தனையைத் தமிழியல் சார்ந்த ஆய்வு நிலையி ல் முன்னெடுத்தவர்களில் தலையானவர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஆவார். 1904ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்களின் பழைமையைப் பற்றிய அவரது கருதுகோள் 2004ஆம் ஆண்டு சான்றுகழுடன் நிறுவப்பட்டது. தமிழ்த்தேசிய பார்வையுடன் கூடிய இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழியல் ஆய்வுகளுக்கு முன்னோடியாக விளங்குகின்றன. அபிதானகோசம் என்னும் முதல் தமிழியல் களஞ்சியத்தை உருவாக்கியவர் இவரே. இவர் எழுதிய நூல்களும் பல.
Be the first to rate this book.