ஆரிய பிராமணிய ஆதிக்கம், அதைத் தொடர்ந்த பிற அயலார் ஆதிக்கம் ஆகியவை தமிழர் பண்பாட்டின் மீது குறிப்பாக தமிழர் கலைகளின் மீது செலுத்திய ஆதிக்கம் இரக்கமற்றது; மிகக் கொடியது!அண்மை ஊடகமான திரைப்படம் வரை அயலார் ஆதிக்கம் தொடர் கிறது. மறுபுறம் சமயத்துறையிலும், கலைத்துறையிலும் தமிழையும். தமிழர் மரபையும் தற்காத்துக் கொள்வதற்கான தொடர் போராட்டங்கள் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே வருகின்றன.
-தமிழர்களின் நீண்டப் போராட்டத்தின் இயக்கு ஆற்றலாக வளமான நமது தமிழ் மொழி விளங்குகிறது. இந்நிலையில்தான், பண்பாட்டுத் துறையிலும், இசை நாடகம் திரைப்படம் ஆகிய கலைத் துறையிலும் நீண்டகாலமாக தமிழினத்தின் தற்காப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இசை, நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் நமது முன்னோர் களின் தடத்தையும், தமிழ்க் கலைகளின் தனித்தன்மைகளையும் வலுவாக எடுத்துக்காட்டி தமிழர் கலை மீட்சிக்கான எதிர்காலத் திசை வழியைக்காட்டும் கடமை நம்முள் உள்ளது.
Be the first to rate this book.