ஆண்டாள் சொல்லியருளிய திருப்பாவை மேல் ஆறாக்காதலுண்டு. பக்தி என்ற கொடிக்கு, பைந்தமிழெனும் அமுதம் ஊற்றி, கண்ணன் மேல் காதல் அரும்புகளாய் முகையுடைந்த பாசுரங்கள் அல்லவா! படித்தாருக்குப் பிடிக்காமல் போகுமா! ஒவ்வொரு முறை பாடல்களைப் படிக்கும் பொழுதும் மனதில் எண்ணும் பொழுதும் உதிக்கும் சிந்தனைகளைச் சீரான வரிகளாக்கினால் என்னவென்று தோன்றியதன் விளைவே, திருப்பாவைக்கு விளக்கம் சொல்லப் புகுந்த முயற்சி. முயற்சி திருவினையாகிப் புத்தகமாகிறது.
இந்தத் திருப்பாவை விளக்கமெனும் புத்தகத்தைப் படிப்பவர்களின் அன்புக்குரியவர்களுக்கு எல்லா நலன்களும் மகிழ்ச்சியும் நிம்மதியும் எப்போதும் இருக்கட்டும். எல்லோரும் கூடி மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
தூத்துக்குடியில் பிறந்து சென்னையின் எண்ணிக்கையில் கலந்துவிட்ட ஜிரா... எழுதப் படித்துக் கொண்டிருப்பவன்.வலைப்பூ காலம் தொடங்கி, எழுத்தோடும் தமிழ்க்கூட்டத்தோடும் தொடர்ந்து பயணிப்பவன். சங்கத்தமிழ்.சிலப்பதிகாரம், திருப்புகழென்று செவ்விலக்கியம் மட்டுமல்ல... மக்கள் இலக்கியத்திலும் எளிய எழுத்துகளிலும் மேய்ந்து கொண்டிருப்பவன். முரண்களின் அரண்.
இவன் எழுதுவதெல்லாம் இவனுக்கு இவனே சொல்லும் கதைகள்தாம். இலக்கியத்துக்கு இலக்கணமில்லை என்று நம்புகிறவன். திரைப்பாடல்களை வைத்து 'நாலு வரி நோட்டு'. சிறுகதைத் தொகுப்பாக 'என் கொங்கை நின் அன்பர்', 'சுவீட் காரம் காப்பி'. புதினமாக 'காமரூபவல்லி' ஆகிய நூல்களை அளித்தவன்.
Be the first to rate this book.