கண்டிப்பதை விட வேறு வழியில்லை
ஐயர் பெரிய, சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி, தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார் என்று எதிர்பார்த்தேன். இந்த சமபந்திப் பிரச்சினை புயலாக எழுந்த பிறகு நான் சேரமாதேவிக்குச் சென்றேன். நட்புரிமையோடு ஐயரிடம் பேசினேன். சமரசமாகப் போக வேண்டும் என்று எடுத்துச் சொன்னேன்.
ஆனால் ஐயர் பிடித்த பிடியை விடவில்லை. குருகுலத்தின் எதிர்காலத்தை அவர் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களின் தேசீய உணர்வை அவர் மதிக்கவில்லை. எதற்கும் ஒத்து வரவில்லை. இந்த நிலையில் நாம் தீர்மானத்தை நிறைவேற்றி அவரைக் கண்டிப்பதை விட வேறு வழியில்லை.
-வை.சு. சண்முகனார்
Be the first to rate this book.