தமிழரசுக் கழகம் எழுப்பிய முழக்கங்களைக் கவி. கா.மு. ஷெரீப் குறித்துள்ளார். "தமிழரசு கொடு! தமிழை அரியணை ஏற்று! \ சமதர்ம ஆட்சி நடு! தமிழினமே ஒன்று படு!" \ "ஓங்குக சோசலிசம்!" "நாங்கள் தமிழர்கள். எங்கள் நாடு தமிழ்நாடு, எங்கள் மொழி தமிழ்மொழி!" "உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்!"... இவர்களது எல்லை மீட்புப் போராட்டத்தால்தான் திருத்தணிப் பகுதி இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அது ஆந்திரத்தில் சேர்க்கப்பட்டு போராட்டத்தின் விளைவாய் மீட்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர்களான நேசமணி, பி.எஸ். மணி. நத்தானி யேல். குஞ்சன் நாடார் போன்றவர்கள் தலைமை தாங்கி வழிநடத்திய போராட்டங்களால்தான் கன்னியாகுமரி கேரளத்திடம் இருந்து மீட்கப்பட்டது. காலத்தால் மறக்க முடியாத பல திரைப் பாடல்களை மக்களுக்குத் தந்தார்.
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?"
"பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ?"
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே!"
"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?"
"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி!"
"அன்னையைப் போலொரு தெய்வமில்லை!"
"ஏரிக்கரையில் மேலே போறவளே பெண் மயிலே!” ஆகியவை இவரின் புகழ்பெற்ற பாடல்களாகும்.
-பெ.மணியரசன்
Be the first to rate this book.