கலைகளின் பிறப்பிடமாகவும், நாகரீகத்தின் கருவூலமாகவும், அறிவின் உறைவிடமாகவும் விளங்கிய நம் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியரைத் தொடர்ந்து, களப்பிரர், பல்லவர், இசுலாமியர். நாயக்கர்கள் ஆட்சி செலுத்தினர். அவர்களின் ஆட்சிக்குப் பின்னர்தான் தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி வலுப்பெற்றது.
'சரித்திரத்தை உருப்போடுவோர் பலர், சரித்திரத்தை உருவாக்குவோர் ஒரு சிலரே' என்பதற்கேற்ப தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய திருப்பத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய மராட்டியர் ஆட்சியைப் பற்றி இந்நூலாசிரியர் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சியின் தோற்றம். வளர்ச்சி, தமிழக கலை வரலாற்றுக்கு மராட்டியர்களின் பங்களிப்பு ஆகியவற்றை பள்ளி மாணவர்கள் படித்தறியும் வகையில் இருப்பதே இந்நூலின் சிறப்பு.
Be the first to rate this book.