தமிழ் மொழி ஆர்வலரான அமெரிக்கா வாழ் முனைவர் ஜோதி எஸ். தேமொழி பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்று. திட்ட ஆய்வளராகப் பணி புரிந்தவர். தற்பொழுது ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் இதழாளராகவும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பல்வேறு இணைய இதழ்களில் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுழைகள் எழுதி வரும் தேமொழி, தமிழ் இலக்கியம், பெரியாரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். தற்பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் ஆகவும், மரபு அறக்கட்டளையின் 'நிணை' இதழின் பொறுப்பாசிரியர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான இவரது 'இலக்கிய நீளாய்வு நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மொழி வளர்ச்சிக்கு உதவும் நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Be the first to rate this book.