கடந்த முப்பதாண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால், தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர். மிகச் சிறந்த படைப்புகளைத் தந்திருப்பவர். படைப்பாக்கச் செயல்பாடுகளை முன்னிருத்தி செய்திருக்கும் இந்த விமர்சன நூல் அவரின் மிக முக்கியமான நூல்.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதிகம் பேசப்படாத எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டு அவர்களது ஆக்கங்களின் நிறைகுறைகளை விமர்சனத்தோடு மதிப்பீடு செய்கிறார். தமிழ்ச் சிறுகதை வளத்திற்கு இவர்களிடமிருந்து கிடைத்த சில அபூர்வமான படைப்புகளை இந்த விமர்சன நூலினூடே சிறப்பாகவே அடையாளப்படுத்தி இருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகை விரிவுபடுத்தியிருக்கும் விதவிதமான குரல்களையும் முகங்களையும் முன்வைக்கும் காத்திரமான நூல்.
Be the first to rate this book.