கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால், தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர்.தமிழ்சிறுகதை காலூன்றிய காலகட்டத்தின் அரிய பக்கங்களையும், வட்டாரத்தன்மையின் செறிவான பின்னணியில் கதைகள் உயர்ந்த இடத்தை அடைகிற தன்மைகளையும், அரசியல் சமுகப் பொருளாதார நெருக்கடிகள் கதையுலகத்தில் ஏற்படுத்திய கொந்தளிப்பான காலத்தின் வெளிப்பாடுகளையும் சிரத்தையோடு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சிறுகதை தொகுப்பு பணிகளில் நாம் அடைந்திருக்கும் உயரம் கூடிய தரம் எந்த எல்லையில் நிற்கின்றன என்பதை சில கட்டுரைகள் ஆராய்கின்றன. சிறுகதை வரலாறு எழுதுபவர்களின் அறியாமை செய்கிற சீரழிவுகள் வாசர்களுக்கு இழைக்கும் துரோகத்தோடு வரலாற்றிற்கும் தீங்காவதை ஒரு கட்டுரை முன்வைக்கிறது. தமிழ்ச்சிறுகதையில் நாம் இன்னும் சென்று அடையவேண்டிய உயர்ந்த கனவு ஒன்று இக்கட்டுரைகளுக்குப் பின் ஒளிவீசுவது இந்நூலின் சிறப்பாக அமைந்திருக்கிறது
Be the first to rate this book.