நிகண்டு என்றால் சொற்களின் தொகுதி, கூட்டம் என்று பொருள். வேதத்திலுள்ள பொருள் விளங்கா அரிதான சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறவே சமஸ்கிருதத்தில் நிகண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழில் பொருள் விளங்காத சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவந்த அம்மரபு பிற்காலத்தில் அனைத்துச் சொற்களுக்கும் பொருள் கூறும் தனி வகையாக வளர்ந்தது. இரு மொழிகளின் நிகண்டுகளையும் ஒப்பிடுகிறது இந்த நூல். தமிழ், சமஸ்கிருத மொழிகளின் தொன்மையான நிகண்டு வரலாற்றை அறியவும் அவற்றின் பொருட்புலத் தொடர்பை அறியவும் அவற்றின் வழித் தற்கால அகராதியியலின் வளர்ச்சியைத் திட்டமிடவும் இந்த ஒப்பீடு பலனளிக்கும்.
Be the first to rate this book.