தமிழர்களின் பண்பாடு உணவு, வீர விளையாட்டுகள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, பல்வேறு கலைகள் உள்ளிட்ட 20 தலைப்புகளிலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சோழர் உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட திருமண முறைகள், தமிழர்களின் சிறப்பான விருந்தோம்பல்கள், ஜாதக நம்பிக்கைகள், சகுனங்கள் பார்த்தல் போன்றவற்றை நூலாசிரியர் அழகாக விவரித்துள்ளார் ஆனி மற்றும் பங்குனி மாதங்களில் தமிழர்கள் வேறு வீட்டுக்குக் குடிபுகுவதில்லை என்ற பழக்கத்தைக் கொண்டிருப்பதை 'ஆனி ஆடி வைக்காதே கூளி மேடு போகாதே' என்ற பழமொழியின் மூலம் மேற்கோள் காட்டியுள்ளார். பல்வேறு சமயச் சடங்குகள், சங்க கால கட்டடக் கலை, சங்கம் மருவிய கால கட்டடக்கலை, பல்வேறு மன்னர்களின் காலத்தில் தழைத்தோங்கியிருந்த சிற்பக்கலைகள், நாடகக் கலை உள்ளிட்டவற்றையும் இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது. தமிழர்களின் வாழ்வோடு ஒன்றியிருந்த பல்வேறு விஷயங்கள் இன்று மறைந்துவிட்டது என்றாலும், இந்நூலைப் படிப்பதன் மூலம் இளைய தலைமுறையினர் அவற்றை அறியமுடியும். அகநானூறு புறநானூறு உள்ளிட்ட பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பது நூலின் தனிச்சிறப்பு.
Be the first to rate this book.