இசையரங்குகளில் தெலுங்கு மொழிப் பாடல்களின் ஆதிக்கம் ஒருபுறம்: தமிழர்களிடத்தில் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது உயர்வென்று கருதும் மனப்போக்கு மறுபுறம் என்று இருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நிறைவுக் காலத்திலே தோன்றி மரபுவழி மேடை நாடகம் மூலம் தமிழ்மொழியை காப்பாற்றியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!
1918 ஆம் ஆண்டு மதுரையில் 'தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா' என்று நாடகக் குழுவை சங்கரதாஸ் சுவாமிகள் தோற்றுவித்த போது 'டி.கே.எஸ். சகோதரர்கள்' என்று அழைக்கப் படும் ஒளவை டி.கே. சண்முகம் இவரிடம் மாணாக்காராக சேர்ந்து நாடகக் கலையை பயின்றார். அவர் பிற்காலத்தில் நாடகத் துறையிலும், திரைத்துறையிலும் கொடிகட்டி பறந்தார்.
அவர் தம்மை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவரைப் பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ளவும் 1957ஆம் ஆண்டு டி.கே. சண்முகம் உருவாக்கிய நூல்தான் 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு நூலாகும்.
இந்நூல் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கலைக்கு ஆற்றிய பணி மிகப்பெரியது என்பதை படிப்போரை உணர வைக்கிறது.
Be the first to rate this book.