தமிழகத்தையும் இந்தியாவையும் நன்கு அறிந்து கொண்டிருக்கிற இந்த அறிஞர் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளையும் சுற்றிப் பார்த்து அங்குள்ள சூழலையும் நன்கு தெரிந்து கொண்டவர். இதழியல் சுவடுகள் என்ற தலைப்பில் இந்த அறிஞர் ஏறக்குறைய 150 ஆண்டுக்கால வரலாற்றை நம்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். இதழியல் வரலாற்றைப் புதிய முறையில் எடுத்துக் காட்டுகின்ற இந்த நூல், அரசியல் வரலாற்றுக்கும் சமுதாய வரலாற்றுக்கும் உரிய பல அரிய செய்திகளை நமக்கு எடுத்து வழங்குகிறது.
இன உணர்வும் மொழி உணர்வும் உடையவராய்ப் பொது மக்களோடு தொடர்பு கொண்டு பொறுப்பான பதவிகளிலும் இருந்து பணியாற்றி நிறைந்த அறிவும் அனுபவமும் பெற்றுள்ள திருவாளர் சம்பந்தன் அவர்கள் மிகவும் முயன்று பாடுபட்டு அரிய செய்திகளைத் தொகுத்து இந்நூலைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார்.
Be the first to rate this book.