இன்றுவரை ஜீவஒளி வீசும் கலைஞரின் வசனங்கள் குறித்த விரிவான ஒரு நூலை எழுதியிருப்பதன் மூலம் சிறந்த ஒரு பெரும்பணியைச் செய்திருக்கிறார் எஸ்.இளங்கோ. உலக சினிமாக்கள் குறித்து அபார ஞானம் கொண்ட இவர், ஒரு திரைப்படக் கல்லூரி செய்ய வேண்டிய பணியைத் தனி மனிதனாக தொடர்ந்து செய்து வருகிறார்.
உலக சினிமாவை மட்டுமல்ல. இந்திய. தமிழ்ச் சினிமாக்களையும் ஆழ்ந்து உள்வாங்கி, அதிலுள்ள நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பகிர்ந்துகொண்டுள்ள எஸ்.இளங்கோவின் முயற்சி பாராட்டுக்குரியது.
-மதுக்கூர் இராமலிங்கம்
Be the first to rate this book.